Sunday, October 12, 2008

ஒரு நாள் மட்டும். . . . . . .


முப்போகம் செழித்திடவே தேக்கி வைத்த குளத்தினிலே ,
குலமகளாய்வாழ்ந்து வரும் நிலமகள் பெற்று எடுத்தால் என்னை .

எப்போதும் உலகை காக்கும் என்னவனாம் மன்னவனாம் பாரெல்லாம் பரந்திருக்கும் தலைவனாம் கடல் அரசனை மணந்து விட்டேன் .

தாமரை மணாளன் என ஊரெல்லாம் அழைக்க கேட்டேன் , அய்யகோ!! அதிர்ந்து போனேன் ,
அத்தனையும் பொய்யென்றேன், ஊர் சொல்ல நான் கேட்டேன் , நான் சொல்ல யார் கேட்டார்?

கண்ணியமாய் வாழ்ந்திடவே அதி காலை எழுந்து முகம் மலர்ந்து நின்றேன் ,

அப்போதும் பாரெல்லாம் சொன்னது இவை எல்லாம் உனக்க்காகவென்று கதிரவேனே !!!

உண்மை சொல்ல வந்திடுவாய் , என் களங்கம் போக்க வந்திடுவாய்
இல்லையேல் நான் உண்மை கூற இன்றொரு நாள் மட்டும் உறங்கிடுவாய் ..........