Friday, November 28, 2008

என் இனிய ஈழம்

ஆசியா கண்டத்தின் தெற்கே அழகான ஒரு குட்டி தீவு

இந்தியா என்ற மாபெரும் சரித்திரத்தை கொண்ட நாட்டின் தென் கோடியில் உள்ள குட்டி நாடு

பல லக்ஷம் ஆண்டுகளுக்கு முன்னாலே

கடலின் சீற்றமாக இருக்கலாம் , ட்சுனாமி வந்திருக்கலாம் இந்தியாவை விட்டு தனியே பிரிந்திருக்கலாம்

கோழி முட்டை வடிவத்தில் இந்து மகா சமுத்திரத்திற்கு அழகு சேர்த்து கொண்டிருக்கும் அந்த அற்புத தீவு

ஆசியாவிலே அழகான சுற்றுலா தளங்களை தன்னகத்தே கொண்ட நாடு

தேயிலை தூட்டங்களும், மலைகளும், மலைச்சாரலும் , பணியும் பனிபடர்ந்த செடிகளும் கொடிகளும் காண கண் குளிருமே அடடா எத்தனை அழகான தீவு

இன்னும் எத்தனையோ எண்ணற்ற வளங்களை கொண்ட நாடு

போர்த்து கீசியனின் கண்களுக்கு படாமல் இருந்திருக்குமா என்ன

தன் அழகையு, வனப்பையும் பேணி காக்கவோ என்னவோ

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னாலே தன் சொந்தங்களான இந்தியர்களை அழைத்தாள் ,
அவர்களும் அவளை பேணி காத்தார்கள்,

செழிப்புற்றால், வளர்ந்தால் , இப்படியாக சில நூறு ஆண்டுகள் ஓடின

அவளின் அழகை பேணி க்லாப்பதிலேயே குறியாக இருந்த புனிதர்களுக்கு வேறெதுவுமே தோன்றவில்லை ,

அவர்களுக்கு தெரியவில்லை போலும் , இன்னும் கொஞ்ச நாட்களில் நம் சந்ததிகள் இங்கே அடிபட்டு போகும், உயிர்விடும் வாழ வழியற்று அனாதைகலாக்கபடும் என்று .

எங்கே என் இந்தியன்

இரு நூறு ஆண்டுகள் ஆங்கிலேயனிடம் அடிமை பட்டு கிடந்தான் ,

இடையில் இவனுக்கு ஏதோ ஒரு திமிரு கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தானோ என்னவோ , நம் நாட்டை நாமே ஆண்டால் என்ன என்ற எண்ணம் என்று தான் நினைக்கிறேன்,
இவனுக்கு சுதந்திரத்தின் மீது இல்லா மோகம்.......... போராட ஆரம்பித்தான் அப்போதே நீயா நானா போட்டி.
பல மாகாணங்களாக பிரிந்து கிடந்தான் , அனைவரும் ஒன்றினைந்தர்கள் சுதந்திரம் பெறுவதற்காக .

ஆரம்ப காலங்களில் துண்டு துண்டாக பிரிந்து கிடந்த மன்னர்கள் தொற்று வியாதி தொட்டது போல மற்ற நாட்டு மன்னன் ஆங்கிலேயனுக்கு வரி கொடுக்கவில்லை நாமும் கொடுக்காமல் இருந்தால் என்ன என்று எண்ணினார்கள் ஒரு வேளை இது சுதாந்திர போருக்கு வித்திட்டு இருக்கலாம்
இதில் பல வேடிக்கைகள் நிறைந்திருக்கிறது , ஒரு சில நாட்டு மன்னர்கள் சுதந்திரம் வேண்டும் என்றார்கள் , பல மன்னர்கள் ஆங்கிலேய துறைகளுக்கு ஒத்து ஊதியும், காட்டி கொடுத்தும், கூட்டி கொடுத்தும்வந்திருக்கிறார்கள் என்பது வேதனை, வெட்கம் அவமானம் .
எப்படியோ சுதந்திர தாகம் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆரம்ப காலங்களில் வளர்ந்து வந்திருக்கிறது

ஒன்றாகத்தான் ஆரம்பித்தார்கள் ஆனால் தனித்தனியாக தீர்மானம் போட்டு ஆங்கிலேயனுக்கு நெருக்கடிகளை கொடுத்திருக்கிறார்கள் ( ஒரே கோரிக்கைக்காக )

பாவம் பல சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கள் இளமைக்காலங்களை சிறையிலேயே கழித்திருக்கிறார்கள் , சுதந்திரத்திற்கு பின் இந்தியர்கள் அனைவரும் நிம்மதியாக, ஒற்றுமையாக வாழ்வார்கள் என்று ......... புரிகிறது கண்டிப்பாக அவர்கள் போட்டத் தப்பு கணக்கு தான் ..........

அவர்களுக்கு தெரியாது மொழிவாரியாக இந்தியர்கள் அனைவரும் பிரிந்து , சிதையுண்டு ரத்த வெறி பிடித்து சண்டையிட்டு கொள்வார்கள் என்று .

அவர்களுடைய நல்ல எண்ணங்களும், தியாகங்களும் கடவுளுக்கு பிடிக்கவில்லையோ என்னவோ

மொழி தீவிரவாதிகளையும் இந்தியாவில் கடவுள் படைத்தான்

ஹிட்லர் சொன்னது போல் " சூத்திரம் பெறுவதற்கு இந்தியர்கள் அருகதை அற்றவர்கள் " என கடவுளும் நினைத்தானோ என்னவோ

ஹட்லரை எதிர்பதற்கு செண்பகராமன் என்ற இந்தியன் இருந்தான் , கடவுளை எதிர்பதற்கு . . . . . . . . ?

எலேச்டின் கூட்டணிக்கு மட்டும் இந்தியர்கள் ஒன்று செர்வர்கள் மற்ற விஷயங்களுக்கு நோ இல்லை லேது .....................

மராட்டியனுக்கு வட இந்தியனையும் பிடிக்காது , தென் இந்தியனையும் பிடிக்காது

தென் இந்தியர்களுக்குள் டனுக்கு தமிழனை பிடிக்காது, தமிழனுக்கு கன்னடனை பிடிக்காது

தமிழனுக்கு தண்ணீர் கொடுக்க கன்னடன் மறுப்பான்

அவனுடைய வியாதி சுந்தர தெலுங்கனுக்கும் பிடித்து விட்டது , மலையாள மன்னர்களுக்கும் பிடித்துவிட்டது

பிகார் , ஒர்ரிச்சா வில் மதங்களை வைத்து சண்டை , புயலானும் வெள்ளமனாலும் எந்த மதத்து காரன் கொடுத்ததாக இருந்தாலும் தின்பார்கள்

நாகலாந்து மக்கள் ஒரு படி மேலே போய் நாகள் இந்தியர்களே இல்லை என்பார்கள் , இந்தியாவிலிருந்து எங்களுக்கு விடுதலை தாருங்கள் என்பார்கள்

மும்பையில் வாழும் டெல்லி காரர்கள் உடனே மும்பையை விட்டு வெளியேறவேண்டும் என்பார்கள் , டெல்லி இந்தியாவில் இல்லையோ என்னவோ ?


சுதந்திரத்துக்கு முன் வரலாறு போராட்டம் எப்படி என்றால் .....?


ஒத்துழையாமை இயக்கம்

சட்ட மறுப்பு இயக்கம்

உப்பு சத்தியாகிரகம்

வெள்ளையனே வெளியேறு

ஆங்கில துணிகள் எரிப்பு

ஆங்கில அரசை எதிர்த்து சுதந்திர போராட்ட வீரர்களின் அறப்போராட்டம் இப்படியாக இருந்தது

இன்று முன்பயை விடு வட இந்தியன் வெளியேறு, தென் இந்தியன் வெளியேறு.....

கர்நாடகாவை விட்டு தமிழனே வெளியேறு ...............

என்று வன்முறை போராட்டங்கள் ..........சூறையாடல்கள் , கொலைகள், பலிகள் எண்ணற்ற பொது சொத்துக்களுக்கு சேதங்கள் ................

இதற்க்காகத்தான் சுதந்திர போராட்ட வீரர்கள் சிறை பட்டு , அடிபட்டு, உதைபட்டு, குடும்பம் அற்று , தன் சுக போகங்களை எல்லாம் விட்டு, இளமைக்கனவுகளை இந்தியாவிற்காக அர்ப்பணித்து பெற்று தந்தார்களா....?

அவர்களுக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்திருக்கும் நம் மேல் ................... நாமோ பிரிவினையே நமது குறிக்கோளாக சண்டையிட்டு கொண்டிருக்கிறோம் பாவம் அவர்கள் .

இனி நாம் இந்தியன் என்று உலகை ஏமாற்றுவதை விட்டு விட்டு தமிழன், கன்னடன், மலையாளி, தெலுங்க, காஷ்மிரி, பிதரி , குஜராத்தி , மராட்டியன் என்றே வேண்டுகிரவற்க்கு வேண்டுகிரவகையில் பிரிந்து கிடக்கலாம்

இனிமேல் நான் மட்டும் அல்ல இந்த உலகமே கேட்கும் யார் இந்தியன் என்று .......?







கடவுளே நீயே சொல் எங்கே என் இந்தியன் என்று..............?