Monday, December 15, 2008

இறைவா!


யாரென தெரியாது
யாருக்கோ
பிறந்துவிட்டேன்

தாய் முகம்
பார்க்குமுன்னே
தொட்டியில்
விழுந்துவிட்டேன்

குப்பை தொட்டியில்
விழுந்துவிட்டேன் !

குப்பை தொட்டியே
பிறப்பிடமாய்

தெருவோரமே
வளர்விடமாய்

அன்பு
பாசம்
இறக்கம்
போன்றவற்றின்
அரிச்சுவடியே
தெரியாமல்
வளர்ந்து விட்டேன்

யார் மீதும்
பாசமும் கொள்ளாமல்
நேசமும் கொள்ளாமல்
பணத்தின் மீது
பாசம் கொண்டு
பாதகம் செய்ய முனைந்தேன்,

என்னால்
தங்க நகை இழந்தோர்
எத்தனை பேர்

தாலி இழந்தோர்
எத்தனை பேர்

மேலாக
உயிரும் இழந்தோர்
எத்தனை பேர்

எண்ணிலடங்கா !!

இறைவா

நான் செய்த பாவங்களுக்கு

நீ என்னை ரட்சிக்க வேண்டாம்


கொடூரமாக எனை கொன்றுவிடு !!!

Wednesday, December 3, 2008

இனி . . . . . !


ஐயோ ! மணி எட்டு ,
அவசரமாய் எழுந்து பல் கூட துலக்காமல்
இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிறேன் ,

அதோ பேருந்து நிறுத்தத்தில் நீ !
கவனித்தேன் உன்னை
கவனிக்கவில்லை சிக்னலை
என் மனசு முழுக்க நீ
இனி
என் வீட்டு பூஜை அறையில் போட்டோவில் மட்டுமே நான் !!

Tuesday, December 2, 2008

பூ பூவாய்


வண்டுகள்
வாசம் செய்யும்
பெண்கள் கல்லூரி!!

ஒரு நாள்
வாழ்க்கைக்கு
எத்தனை
சப்தமில்லா
சிரிப்புகள்
உங்களுக்குள்!!


எப்படி
உங்களால் மட்டும்
முடிகிறது
எப்போதும்
சிரித்துக்கொண்டே
இருக்க!!