Sunday, May 10, 2009

உன் பார்வையில் .......

பொட்டல் காடு
கருகிய மரங்கள்
சுட்டெரிக்கும் சூரியனின்
ஓசோன் படலத்தில் வடிகட்டபடாத வெப்பம்
என்ன விதைத்தாலும்
கருகிடும் விதைகள் .....
காய்ந்த நிலம் என் மனம்
இதில் ஒன்றே ஒன்று மட்டும் முளை கொண்டது

உன் ஒரு நொடி பார்வையால் ......... காதல்......

Sunday, May 3, 2009

நலம்தானா?

கண்ணசைத்தாய்
காதலிகிறாயா என கேட்டு?

கவிதை தந்தாய்
காதலிக்கிறேன் என்று

சுற்றி சுற்றி வந்தாய்
உனக்கேத்த
சுந்தரன் நான் தான்
என்று
சொல்லி கொண்டு
நான் கல்லூரி செல்கையில்
நீ
காவலனாய் வந்தாய்

உன் நண்பர்களின்
மத்தியில்
என்னை
கதாநாயகி ஆக்கினாய்
சுந்தரி என்பெயர் என்பதால்
மடையனே
மாற்றி கொண்டாயா
உன் பெயரை சுந்தரென்று ......

பழைய பெயர்
பிடித்ததென்று

கவிதை எழுதினேன்
நானும் உன்னை
காதலிக்கிறேன் என்று

காதலிக்கிறோம் என்று சொல்லி
தறி கேட்டு சுற்றினோம் திசை எட்டும்

உன் வார்த்தை கேட்டு
மதி கேட்டு
உன்னோடு
உறவாடி நிக்கிறேன்
மானங்கெட்டு .......

மாசற்ற காதல்
மடியாது கண்ணே
என்றாய்
வளர்கிறது.......... என் வயிற்றில் உன் கரு ....

கட்டி காக்க
வருவேன்
காவலனாய் அல்ல
காதலனாய்
என்றாய்

இன்று
நம் குழந்தைக்கு
தகப்பனாய் வருவாயா?

என்னை
சுற்றி சுற்றி
வந்தாய்
இன்று நான்
சுற்றம் இல்லாமல்
தவிக்கிறேன் .....

சொந்தமாய்
சுகம் தேடினேன்
சொந்தங்கள்
இல்லாமல்
சுனங்கி
போயிருக்கிறேன் ......

மறக்கவும் முடியாமல்
மறைக்கவும் முடியாமல்
கலங்கவும் முடியாமல்
கலைக்கவும் முடியாமல்

சிக்கி தவிக்கிறேன்
செந்தமரையான நான்
சேற்று தாமரையாய் .....

மீழ்வேனோ நான் வாழ்வேனோ ?

வாழ்ந்தால் புறமிட்டு
பேசாதோ இவ்வுலகம் !

மனம் விட்டு பேசி
மதி கெட்டு போனேன்
மதி கேட்டதால் மானங்கெட்டு போனேன்

தூற்றுவார் தூற்று முன்னே
இவ்வுலகம் விட்டு போகிறேன்
மன்னவனே
நீ நலம்தானா?

கண்ணீர் விடு !!!!!


நான்
முதன்முதலில்
உன்னை பார்த்தேன்
உன் விழிகளில்
என்னை பார்த்தேன்

கடும் புயலாய்
வரும் நான்
தென்றல் ஆகின்றேன் ..

பெரும் அலையாய்
வரும் நான்
மௌனம் அடைகின்றேன்
உன் வருகையால் ......

கடும் கோபமாய்
வரும் நான்
பனிபோல்
உரைகின்றேன்
உன் பார்வையால் ....

உன் இதயத்தில்
நான் இருக்கேனா?
இல்லை
உன்னை எண்ணி
தினம் தினம்
கண்ணீரில் கரைவேனோ?

கண்கள் பாராமல்
உள்ளம் தாளாமல்
தத்தளிக்கிறேன் நான்

வழியெங்கும் காணுகின்றேன்
வண்ண வண்ண பூக்களாய் ....
உன்னையே
சுவாசிக்கின்றேன்
மலர்களின் வாசத்தால்

பார்வையால்
சுட்டாலும்
வார்த்தைகளால்
கொன்றாலும்
மடியாது கண்ணே
உன் நினைப்பு
இது
என் இதயத்தில்
வளர்பிறையின்
மறு பிறப்பு

எண்ணங்களில்
தோணி செய்து
நினைவுகளை துடுப்பாக்கி
காதல் கடலில்
உல்லாச
பயணம் செல்ல
காத்திருக்கிறேன் ....

கலங்க வைத்தது போதும் ,
என்னை காக்க வைத்தது போதும் ....
நான் கண்ணீர் விட்டதும் போதும் ....

புயல் வரும் பயம்
வேண்டாம்
பெண்ணே

காதல் பயணத்தில்
புயல் கூட
தென்றல் தான்

தீயை தின்றாலும்
தித்திக்கும் பெண்ணே
முட்களும் மலர்களாகும்

முரண்பாடு வேண்டாம்

என் வாழ்க்கை
முடியுமுன்
கலந்து விடு என்னோடு,
முடிந்து விட்டால்
ஒரே ஒரு சொட்டு
கண்ணீர் விடு ......!

Saturday, May 2, 2009

நான் எப்படி பேசுவேன் ?


தீபாவளி நேரத்து
வீதிகள் போல
ஈழத்து வீதிகளில்
சிதறிகிடக்கிறது
என் உறவுகளின் உடல்கள் ...
கையொரு பக்கமும்,
காலொரு பக்கமுமாக

பக்கத்தில் இருந்தும்
பார்த்து கொண்டு
மட்டுமே இருக்கிறேன்
எதுவுமே பேசவில்லை .........

செம்மண் பூமியென காட்சியளிக்க
உற்று பார்கிறேன் அந்நிலத்தை
புரிந்ததெனக்கு
அது இயற்கை அல்ல
என் உறவுகளின் உதிரம் படிந்ததன் விளைவு
இருந்தும் நான் மௌனியாகவே
எதுவுமே பேசவில்லை .............

என் கண் முன்னே
காமத்திற்கு இரையாகி
பின் பிறப்பு உறுப்பிலே
துப்பாக்கி துளைக்க
வெடித்து சிதருகிறாள்
என் சகோதரி
வேடிக்கை மட்டுமே
பார்க்கிறேன்
எதுவுமே பேசவில்லை ............

அஞ்சு வயசு ஆறு வயசு
பிஞ்சுகள் எல்லாம்
போராளிகளாம்
செஞ்சோலையிலே
குண்டு வீசி கொன்று ஒழித்தார்கள்
கனத்த இதயத்தோடு
பார்த்து கொண்டிருந்தேன்
எதுவுமே பேசவில்லை ............

நான் செலுத்திய
வரிப்பணம்
என் சொந்தங்களை
கொன்று ஒழிக்க
வட்டி இல்லா
கடனாக போன போதும்
நான் எதுவுமே பேசவில்லை ..........

நான் எப்படி பேசுவேன்
நான் எப்போதுமே
இந்திய இறையாண்மையை
எதிர்த்து பேசுபவன் இல்லையே ..........................!!!!!!!

Thursday, April 9, 2009

மழைகாலத்தின் மாலை வேளையில்

மழை காலத்தின்
மாலை வேளையில்
மழை ஓய்ந்தபின்
நீயும் நானும்
அந்த அழகான பூங்காவில்
நடந்து சென்று
கொண்டிருந்தோம்

திடீரென

தேன் கூடு காட்டுகிறேன்
அந்த மரத்தில்
என்று அழைத்து
சென்றாய்

ஆசையாய்
உன்னோடு
வந்தேன்

நான் மரக்கிளையை
அண்ணாந்து
பார்த்த நேரத்தில்
கிளையின் நுனியை
இழுத்து விட்டாய்

மரமோ
தான் சேகரித்து
வைத்திருந்த
தண்ணீர் பூக்களை
என் மீது
அழகாய் தூவியது

என் பிறந்த நாள்
வாழ்த்தை
எத்தனை அழகாய்
சொன்னாய் .

உன்னோடு
நடந்து செல்லும்
போதெல்லாம்
உன் கைகளை
இறுக பற்றி கொண்டே
நடப்பதில்
எனக்கு
ஆனந்தம் அதிகம் .......

யாரவது
பார்ப்பார்கள் என்று
என் கைகளை
எடுத்து விட்டு
கொண்டே வருவாய்

உன்னோடு
நான்இருக்கும்
போதெல்லாம்
உன்னை தவிர
வேறெதுவுமே
என் கண்களுக்கு
புலப்படுவதில்லையடா

ஒரு நாள்
யாரும் இல்லாத
நேரத்தில்
பேசிக்கொண்டிருதோம்
நீயும் நானும்
ரொம்பவும் எதார்த்தமாக

நான் சற்றும்
எதிர்பார்க்காத நேரத்தில்
நீ கொடுத்த முத்தம்
இன்னும்
என் இதழோரத்தில்
இனிக்குதடா

என்னை
சந்திக்க
வரும்போதெல்லாம்
ஏதாவது
ஒரு பரிசு
பொருளோடு
வருவாய்

வேண்டுமென்றே
அது பிடிக்கவில்லை
என்பேன்

சங்கோஜத்தில் கோனும்
உன் முகத்தை காண
அத்தனை
ஆவலடா எனக்கு

பிறகு
சும்மா என்று சொல்லும்
போதே குட்டுவாய்
என் தலையில்
எங்கே
வலித்துவிடுமோ என்று பயந்து கொண்டே மெல்லமாக

உன்னை சந்தித்த பின்பு
நான் தூங்கிய
நேரங்கள்
ரொம்ப ரொம்ப குறைவு

கனவுகளில் கூட
எதாவது
பரிசு பொருளோடு
வருகிறாய்

இரவுகளில்
நான் ரொம்பவும்
வெட்கமடைகிறேனடா

Thursday, March 26, 2009

தமிழின் அருமையை அறிவோமா..........

POWER OF TAMIL - Can you compare it with any other languages?????????



1 = ONDRU -one
10 = PATTU -ten
100 = NOORU -hundred
1000 = AAYIRAM -thousand
10000 = PATTAYIRAM -ten thousand
100000 = NOORAYIRAM -hundred thousand
1000000 = PATTU NOORAYIRAM - one million
10000000 = KOODI -ten million
100000000 = ARPUTHAM -hundred million
1000000000 = NIGARPUTAM - one billion
10000000000 = KUMBAM -ten billion
100000000000 = KANAM -hundred billion
1000000000000 = KARPAM -one trillion
10000000000000 = NIKARPAM -ten trillion
100000000000000 = PATHUMAM -hundred trillion
1000000000000000 = SANGGAM -one zillion
10000000000000000 = VELLAM -ten zillion
100000000000000000 = ANNIYAM -hundred zillion
1000000000000000000 = ARTTAM -?////
10000000000000000000 = PARARTTAM --anybody know
100000000000000000000 = POORIYAM -<>?#%^&
1000000000000000000000 = MUKKODI -&^*^%^#
10000000000000000000000 = MAHAYUGAM -????????????????

Wednesday, March 11, 2009

அட என்ன காந்தியம் !!

காந்தியின்
சுவடுகளை
தொலைத்த
காங்கிரஸ் தொண்டர்களுக்கு
வருத்தமாம்

சாராய வியாபாரி
சுவடுகளை மீட்டெடுத்ததில்

தமிழனின் உணர்வு

எங்களின்
வார்த்தைகள்
ராஜபுத்திரர்களின்
உடைவாளை போன்றது

போர்களத்தில்
மட்டுமே பாயும்

சிலரின் அடுப்பங்கரையில்
காய்கறி
நறுக்காது !!!

கடைக்கண் பார்வை !!

என்றோ பட்ட
என் கடைக்கண்
பார்வையில்

சிறு செடி ஒன்று
ஆலமரம் போல்
வளர்ந்து
நின்றேனை
ஆரத்தழுவிட
நினைத்தபோது
உதறி தள்ளியது
என் உதடுகள் மட்டும்

இனியவளே !

அந்தி சூரியன்
அவசரகதியில்
போய்க்கொண்டிருந்த நேரம்

மஞ்சள் வானம் மனதை திருடியது

அந்த நேரத்து
ரயில் பயணத்தில்
ஜன்னலோர இருக்கையில்
நீ

உன் எதிர்
இருக்கையில்
வந்தமர்ந்த நேரம்
முதல்
உன்னையே
ரசித்துகொண்டிருந்தேன்

எதார்த்தமாய்
நீ
வீசிய பார்வையில்

மஞ்சள் வானமாகி போனாய் நீ

சில்லென்றது மனம் !

விதியே விதியே

விதியே விதியே
என்ன செய்ய நினைதிட்டாய்
தமிழ் சாதியை

உலகே
உன் செவிகளுக்கு
எட்டவில்லையோ
என் உலக தமிழர்களின்
குமுறல்

வீதிகொரு போராட்டமும்
ஊருக்கொரு தீக்குளிப்பும்
ஒவ்வொரு நாளும்
நடந்தேறிகொண்டிருக்க

வான் வெளி தாக்குதலில்
வழி நெடுக தமிழனின் பிணம்

குழந்தை என்ன ?
குமரன் என்ன?
கிழவன் என்ன ?

தமிழனா?

கொன்று
குவிக்க படவேண்டியவர்கள் .


குண்டடி பட்டு சாவது மட்டும் என்ன
கொளுத்திக்கொண்டு சாவதும்
என் தமிழனே

உலகமே உற்று நோக்கும்
சமயத்திலும்
உரக்க கத்துகிறான்

"கோத்தபாய "

எனும் சிங்களன்

- தமிழ் பெண்கள் ராணுவத்தினர்க்கு இரையாகட்டும்

தமிழ் ஆண்கள் கடலுக்கு இரையாகட்டும் - என்று

உலகமே நீ செவிடானதேனோ ?

குருடானதேனோ ?

விதியே ! உலகே உன் நோக்கம் தான் என்னவோ?

மகனே வீரனே

ஏன் பிறந்தாயா, என் செல்வமகனே.....?

உலகை உலுக்கும் உக்கிரமான போராம் ,
போர் விமானங்களுக்கு பயந்து பதுங்கு குழிகளுக்குள் புகழிடம் தேடியே பொழுதுகள் நகர்கிறது

பிழைக்க வழி இல்லை
வெடிகுண்டுகளின்
சத்தங்களுக்கு இடையில்

உன் அழுகுரல்

எனை வீரிட்டு எழ செய்து

சுதாரித்து பாலூட்ட முனைகிறேன்

இரண்டு நிமிட மௌனத்திற்கு
பின் மீண்டும்
உன் அழுகுரல்

பால் சுரக்கவில்லை

பதுங்குவதர்க்கே நாழிகைகள் போக
நான் என்ன செய்ய ?

நான்
பசியாறி
பாலூறி
உனக்கு புகட்ட .

பெட்டைகளான முப்படைகளும்

நம் போராளி தாக்குதல்களை
எதிர்க்க திராணி இல்லாமல்

பாவம் !
நம் பெண்டிரையும்,
நிராயுதபாணி மக்களையும்
கொன்று குவிக்கிறது .

பள்ளிகூடங்களும்
மருத்துவமனைகலுமே
அவர்களது
இலக்காம் .....

அதிகாரம் இல்லை
அடிமை முறை மட்டுமே
நமக்கு கிடைத்த சுதந்திரமாம் ,

கண்ணில் படும்
தமிழ் பெண்டிரெல்லாம்
ராணுவ காமுகர்களுக்கு
இரையாகட்டுமாம்

கண்ணில் படும்
தமிழ் ஆடவரெல்லாம்
கடலுக்கு இரையகட்டுமாம்

எத்தனை கொடுமையடா !

என்னடா மகனே
பால் சுரக்கவில்லையோ?

ஏனடா அழுகிறாய் ?

அழாதே
நீ தமிழனாக பிறந்தவன்

சுதந்திரம் மட்டுமே
உன் பசியை போக்கும்

வயிற்று பசியை
மறக்க கற்றுக்கொள்

வயிற்று பசியாலும்
மரணம் சம்பவிக்கும் எனும் போது
வெடிகுண்டுகளுக்கு பயந்து
பதுங்கு குழிகள் எதற்கு
என்கிறாயா?

உன்னை பெற்றதே
இம் மண்ணில்
சுதந்திரம்
பெறுவதற்காக தானே !

ஒரு போராளியை
உருவாக்கத்தானே !

உனக்கு
இந்த பதுங்கு குழிகள்
எதிரியை
கொன்று குவித்து
புதைக்க பயன்படும் .......

மார்பை முட்டி
குடித்து கொண்டிருக்கிறது
என் தமிழ் குழந்தை
பாலுக்கு பதில் வீரத்தை !!

Sunday, March 8, 2009

சார்லஸ் அந்தோனி

சிங்கத்தின் கூடாரத்தை
சின்னா பின்னமாக்கபோகும்
எங்களின்
புலிக்குட்டி !

Monday, January 12, 2009

விடியலை நோக்கி நெடுங்கால பயணம். . . . . . . .

மேற்கூரை வேயாத வீடுகள்

எப்போது வேண்டுமானாலும்

எங்கள் மீது குண்டுகள் வீசலாம்

நாங்கள் தமிழர்கள் தாம்

ஆதிவாசிகளான நாங்கள் அகதிகளாய்

காடுகளில் வசிக்க தொடங்கிவிட்டோம்

பாம்புகள்கூட பாசமாக கடிக்கிறதே !

இலை தழைகளை தின்ன பழகிகொள்கிறோம்.

அகதிகளான நாங்கள் ஆடு மாடுகளாய்

அஞ்சு வயசு ஆறு வயசு
பிஞ்சுகளுக்கு ஆயுத பயிற்சி அளிக்க நாங்கள் தரிகெட்டவர்கள் அல்ல .


சிங்களனே !

செஞ்சோலையிலே எங்களின் பிஞ்சுகளை தமிழின குஞ்சுகளை குண்டு வீசி கொன்றாயே

ஈழத்தை வளமாக்கிய எங்களின் ஈரக்குடலை அறுத்தாயே
ரசித்தாயேஎங்களின் படிப்பை தடை விதிதாயே

அரப்போராட்டதிலே ஆயிரம் பேர் குருதியை குடித்தாயே

குருதியை உடல் முழுக்க பூசி ரசித்தாயே

தமிழன் தலை குனிந்து போவான் என்றோ?

முப்பது ஆண்டுகளாய் முட்டி மோதி பார்கிறாய்

தமிழனின் தலை முடியை பிடுங்க முடியவில்லை உன் ஆயுதத்தால் ......

யார் கொடுத்தார் ஆயுதங்கள் என் தமிழனுக்கு, என் தலைவனுக்கு ?

கப்பலில் கடத்திவந்தோம் என்று கணக்கு காட்டினாய் ,

எண்ணி பாரடா உன் கத்து குட்டி ராணுவத்துக்கு தமிழனை அழிக்க நீ வாங்கி குவித்த ஆயுதங்கள் அத்தனையும் ,

உயிர் பிழைத்தால் போதுமென்று புரமுதுகிட்டோடிய உன் படையினர் விடுவிடோடியது.

அரபோராடத்தை ஆயுத போராட்டமாக மாற்றியது யார்? தமிழனா?

படித்து புகழ் பெர்கிறான்

பாரெங்கும் பறந்து கிடக்கிறான்

அதிகாரத்திற்கு வந்தால் அவனை அசைக்க முடியாது என்ற பயம் உங்களுக்கு !




Thursday, January 1, 2009

எழுந்து வா பாரதியே !

அன்று எழுதினாய்
" தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று ".

இன்று பார்

மக்கள் பிளாட்பாரத்தில் பிச்சை எடுக்கும் நிலையில் கோடி ரூபாய் செலவில் கோயில் கும்பாபிஷேகமாம்

ஒட்டிய வயிறும் வற்றிய மார்பும் உள்ள தாய் மார்களின் குழந்தைகளின் ஆரவாரத்தில் லிட்டர் லிட்டராய் கோயிலில் பாலாபிஷேகம்

இயற்கையின் சாபத்தால் ஒன்றுமே இல்லை இன்னும் பல லட்சம் ஏழை மக்களுக்கு


பிள்ளையார் கேட்டாராம் காஞ்சி பட்டு துட்டும் வேட்டியும்

கைஎந்தியவனுக்கு பத்து பைசா தர்மமாம்

மலையேறிய பகவானுக்கு கோடி கோடியாய் உண்டியல் காணிக்கையாம்

என்று தணியும் எம் மக்களின் பசியெனும் தாகம்
என்று மடியும் பிளாட்பார மோகம்

இது புல்லுருவிகளின் காலம் ..... இன்று வாழ்ந்த உன்னை மறந்து விட்டனர் என்றோ வாழ்ந்தானம் அவனை போற்றுகின்றனர் விழா எடுக்கவும் கோயில் கட்டவும் ...

பாரதியே !!

சாதிகள் இல்லையடி பாப்பா என்றாய் இன்று சந்துக்கு சந்து சாதியின் பெயர்கள்

அரசாங்கம் உன் கருத்தை ஏற்றது பள்ளி பாட புத்தகங்களுக்கு மட்டும் . . ...

எழுந்து வா பாரதியே !

எழுதியதை வாங்கிக்கொள்

முப்பது கோடி முகமுடையாள் எனின் சிந்தனை ஒன்றுடையாள் என்றாய்

இன்றிருந்தால் நீ

நூறு கோடி முகமுடையாள் அதிலும் இம்பது கோடி சாதி உடையால் என்று எழுதியிருப்பாய்

புதிதாய் பிறந்து வா பாரதியே

இல்லை இல்லை நீ எழுந்தே வா

நீ இனி பிறந்து வளர்ந்து வருவதற்குள் மடிந்து விடும் இந்த மானுட யுகம் !!

இயற்கைக்கும் பிடிக்கவில்லை இந்த ஏழையை

ஆற்று நீரை நம்பி விதை விதைத்தேன்

தண்ணீர் வந்த பாடில்லை !

என் கண்களில் கண்ணீர் வந்தது !

வீட்டு கூரையின் வழியே வானத்தை பார்த்தேன் . . .

மேகங்கள் சூழ்ந்தன

மனசு குளிர்ந்தது .

காற்றின் வேகத்தை வீட்டு கீற்றின் வழியே அறிந்தேன் . . . .

வீசிய காற்று கூரையை நாசமாக்கியது

பெய்த மழை விதைத்த நெல்மணிகளை வாரி கொண்டு போனது

இறைவனே இயற்கைக்கும் பிடிக்கவில்லையோ இந்த ஏழையை !

புரியாத புதிர் !

நாங்கள் சிவப்பு விளக்கு பகுதியில் இருப்பது
வறுமை எனும் சிவப்பு கொடு சீண்டியதால் தான்

விளக்குகள் அனைந்தால்தான் எங்களுக்கு விடியலே பிறக்கும்

வளர்ந்ததும் கேட்பாள் என் மகள் யாருக்கு பிறந்தேன் நான் என?

யாரென சொல்வேன் ?

பெற்றுவிட்டேன் வீச மனமில்லை குப்பைதொட்டியில்

விழுந்துவிட்டேன் நான் சாக்கடையில்

என் மகள் மலராக வளரவேண்டும் என்பது என் ஆசை

அவள் மலராவாளா இல்லை நூலை போல சேலை என்பதற்கு
உதரனமவாலா என்பது எனக்கு புரியாத புதிராய் !!!