Wednesday, March 11, 2009

இனியவளே !

அந்தி சூரியன்
அவசரகதியில்
போய்க்கொண்டிருந்த நேரம்

மஞ்சள் வானம் மனதை திருடியது

அந்த நேரத்து
ரயில் பயணத்தில்
ஜன்னலோர இருக்கையில்
நீ

உன் எதிர்
இருக்கையில்
வந்தமர்ந்த நேரம்
முதல்
உன்னையே
ரசித்துகொண்டிருந்தேன்

எதார்த்தமாய்
நீ
வீசிய பார்வையில்

மஞ்சள் வானமாகி போனாய் நீ

சில்லென்றது மனம் !

No comments: