Wednesday, March 11, 2009

விதியே விதியே

விதியே விதியே
என்ன செய்ய நினைதிட்டாய்
தமிழ் சாதியை

உலகே
உன் செவிகளுக்கு
எட்டவில்லையோ
என் உலக தமிழர்களின்
குமுறல்

வீதிகொரு போராட்டமும்
ஊருக்கொரு தீக்குளிப்பும்
ஒவ்வொரு நாளும்
நடந்தேறிகொண்டிருக்க

வான் வெளி தாக்குதலில்
வழி நெடுக தமிழனின் பிணம்

குழந்தை என்ன ?
குமரன் என்ன?
கிழவன் என்ன ?

தமிழனா?

கொன்று
குவிக்க படவேண்டியவர்கள் .


குண்டடி பட்டு சாவது மட்டும் என்ன
கொளுத்திக்கொண்டு சாவதும்
என் தமிழனே

உலகமே உற்று நோக்கும்
சமயத்திலும்
உரக்க கத்துகிறான்

"கோத்தபாய "

எனும் சிங்களன்

- தமிழ் பெண்கள் ராணுவத்தினர்க்கு இரையாகட்டும்

தமிழ் ஆண்கள் கடலுக்கு இரையாகட்டும் - என்று

உலகமே நீ செவிடானதேனோ ?

குருடானதேனோ ?

விதியே ! உலகே உன் நோக்கம் தான் என்னவோ?

No comments: