விதியே விதியே
என்ன செய்ய நினைதிட்டாய்
தமிழ் சாதியை
உலகே
உன் செவிகளுக்கு
எட்டவில்லையோ
என் உலக தமிழர்களின்
குமுறல்
வீதிகொரு போராட்டமும்
ஊருக்கொரு தீக்குளிப்பும்
ஒவ்வொரு நாளும்
நடந்தேறிகொண்டிருக்க
வான் வெளி தாக்குதலில்
வழி நெடுக தமிழனின் பிணம்
குழந்தை என்ன ?
குமரன் என்ன?
கிழவன் என்ன ?
தமிழனா?
கொன்று
குவிக்க படவேண்டியவர்கள் .
குண்டடி பட்டு சாவது மட்டும் என்ன
கொளுத்திக்கொண்டு சாவதும்
என் தமிழனே
உலகமே உற்று நோக்கும்
சமயத்திலும்
உரக்க கத்துகிறான்
"கோத்தபாய "
எனும் சிங்களன்
- தமிழ் பெண்கள் ராணுவத்தினர்க்கு இரையாகட்டும்
தமிழ் ஆண்கள் கடலுக்கு இரையாகட்டும் - என்று
உலகமே நீ செவிடானதேனோ ?
குருடானதேனோ ?
விதியே ! உலகே உன் நோக்கம் தான் என்னவோ?
Wednesday, March 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment