Thursday, January 1, 2009

இயற்கைக்கும் பிடிக்கவில்லை இந்த ஏழையை

ஆற்று நீரை நம்பி விதை விதைத்தேன்

தண்ணீர் வந்த பாடில்லை !

என் கண்களில் கண்ணீர் வந்தது !

வீட்டு கூரையின் வழியே வானத்தை பார்த்தேன் . . .

மேகங்கள் சூழ்ந்தன

மனசு குளிர்ந்தது .

காற்றின் வேகத்தை வீட்டு கீற்றின் வழியே அறிந்தேன் . . . .

வீசிய காற்று கூரையை நாசமாக்கியது

பெய்த மழை விதைத்த நெல்மணிகளை வாரி கொண்டு போனது

இறைவனே இயற்கைக்கும் பிடிக்கவில்லையோ இந்த ஏழையை !

No comments: