Saturday, May 2, 2009

நான் எப்படி பேசுவேன் ?


தீபாவளி நேரத்து
வீதிகள் போல
ஈழத்து வீதிகளில்
சிதறிகிடக்கிறது
என் உறவுகளின் உடல்கள் ...
கையொரு பக்கமும்,
காலொரு பக்கமுமாக

பக்கத்தில் இருந்தும்
பார்த்து கொண்டு
மட்டுமே இருக்கிறேன்
எதுவுமே பேசவில்லை .........

செம்மண் பூமியென காட்சியளிக்க
உற்று பார்கிறேன் அந்நிலத்தை
புரிந்ததெனக்கு
அது இயற்கை அல்ல
என் உறவுகளின் உதிரம் படிந்ததன் விளைவு
இருந்தும் நான் மௌனியாகவே
எதுவுமே பேசவில்லை .............

என் கண் முன்னே
காமத்திற்கு இரையாகி
பின் பிறப்பு உறுப்பிலே
துப்பாக்கி துளைக்க
வெடித்து சிதருகிறாள்
என் சகோதரி
வேடிக்கை மட்டுமே
பார்க்கிறேன்
எதுவுமே பேசவில்லை ............

அஞ்சு வயசு ஆறு வயசு
பிஞ்சுகள் எல்லாம்
போராளிகளாம்
செஞ்சோலையிலே
குண்டு வீசி கொன்று ஒழித்தார்கள்
கனத்த இதயத்தோடு
பார்த்து கொண்டிருந்தேன்
எதுவுமே பேசவில்லை ............

நான் செலுத்திய
வரிப்பணம்
என் சொந்தங்களை
கொன்று ஒழிக்க
வட்டி இல்லா
கடனாக போன போதும்
நான் எதுவுமே பேசவில்லை ..........

நான் எப்படி பேசுவேன்
நான் எப்போதுமே
இந்திய இறையாண்மையை
எதிர்த்து பேசுபவன் இல்லையே ..........................!!!!!!!

No comments: