Sunday, May 3, 2009

கண்ணீர் விடு !!!!!


நான்
முதன்முதலில்
உன்னை பார்த்தேன்
உன் விழிகளில்
என்னை பார்த்தேன்

கடும் புயலாய்
வரும் நான்
தென்றல் ஆகின்றேன் ..

பெரும் அலையாய்
வரும் நான்
மௌனம் அடைகின்றேன்
உன் வருகையால் ......

கடும் கோபமாய்
வரும் நான்
பனிபோல்
உரைகின்றேன்
உன் பார்வையால் ....

உன் இதயத்தில்
நான் இருக்கேனா?
இல்லை
உன்னை எண்ணி
தினம் தினம்
கண்ணீரில் கரைவேனோ?

கண்கள் பாராமல்
உள்ளம் தாளாமல்
தத்தளிக்கிறேன் நான்

வழியெங்கும் காணுகின்றேன்
வண்ண வண்ண பூக்களாய் ....
உன்னையே
சுவாசிக்கின்றேன்
மலர்களின் வாசத்தால்

பார்வையால்
சுட்டாலும்
வார்த்தைகளால்
கொன்றாலும்
மடியாது கண்ணே
உன் நினைப்பு
இது
என் இதயத்தில்
வளர்பிறையின்
மறு பிறப்பு

எண்ணங்களில்
தோணி செய்து
நினைவுகளை துடுப்பாக்கி
காதல் கடலில்
உல்லாச
பயணம் செல்ல
காத்திருக்கிறேன் ....

கலங்க வைத்தது போதும் ,
என்னை காக்க வைத்தது போதும் ....
நான் கண்ணீர் விட்டதும் போதும் ....

புயல் வரும் பயம்
வேண்டாம்
பெண்ணே

காதல் பயணத்தில்
புயல் கூட
தென்றல் தான்

தீயை தின்றாலும்
தித்திக்கும் பெண்ணே
முட்களும் மலர்களாகும்

முரண்பாடு வேண்டாம்

என் வாழ்க்கை
முடியுமுன்
கலந்து விடு என்னோடு,
முடிந்து விட்டால்
ஒரே ஒரு சொட்டு
கண்ணீர் விடு ......!

No comments: