மழை காலத்தின்
மாலை வேளையில்
மழை ஓய்ந்தபின்
நீயும் நானும்
அந்த அழகான பூங்காவில்
நடந்து சென்று
கொண்டிருந்தோம்
திடீரென
தேன் கூடு காட்டுகிறேன்
அந்த மரத்தில்
என்று அழைத்து
சென்றாய்
ஆசையாய்
உன்னோடு
வந்தேன்
நான் மரக்கிளையை
அண்ணாந்து
பார்த்த நேரத்தில்
கிளையின் நுனியை
இழுத்து விட்டாய்
மரமோ
தான் சேகரித்து
வைத்திருந்த
தண்ணீர் பூக்களை
என் மீது
அழகாய் தூவியது
என் பிறந்த நாள்
வாழ்த்தை
எத்தனை அழகாய்
சொன்னாய் .
உன்னோடு
நடந்து செல்லும்
போதெல்லாம்
உன் கைகளை
இறுக பற்றி கொண்டே
நடப்பதில்
எனக்கு
ஆனந்தம் அதிகம் .......
யாரவது
பார்ப்பார்கள் என்று
என் கைகளை
எடுத்து விட்டு
கொண்டே வருவாய்
உன்னோடு
நான்இருக்கும்
போதெல்லாம்
உன்னை தவிர
வேறெதுவுமே
என் கண்களுக்கு
புலப்படுவதில்லையடா
ஒரு நாள்
யாரும் இல்லாத
நேரத்தில்
பேசிக்கொண்டிருதோம்
நீயும் நானும்
ரொம்பவும் எதார்த்தமாக
நான் சற்றும்
எதிர்பார்க்காத நேரத்தில்
நீ கொடுத்த முத்தம்
இன்னும்
என் இதழோரத்தில்
இனிக்குதடா
என்னை
சந்திக்க
வரும்போதெல்லாம்
ஏதாவது
ஒரு பரிசு
பொருளோடு
வருவாய்
வேண்டுமென்றே
அது பிடிக்கவில்லை
என்பேன்
சங்கோஜத்தில் கோனும்
உன் முகத்தை காண
அத்தனை
ஆவலடா எனக்கு
பிறகு
சும்மா என்று சொல்லும்
போதே குட்டுவாய்
என் தலையில்
எங்கே
வலித்துவிடுமோ என்று பயந்து கொண்டே மெல்லமாக
உன்னை சந்தித்த பின்பு
நான் தூங்கிய
நேரங்கள்
ரொம்ப ரொம்ப குறைவு
கனவுகளில் கூட
எதாவது
பரிசு பொருளோடு
வருகிறாய்
இரவுகளில்
நான் ரொம்பவும்
வெட்கமடைகிறேனடா
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
hey super da tamizha
Thambi, loverota feelinga appadiye sechukki irrukke.
Post a Comment