Saturday, April 30, 2011

முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன் தொகுப்பிலிருந்து

'வளைந்து

கொடாவிடில்
ஒடிந்து போவாய்
வளைதலின்
ஒடித்தாலே நலம்'
*************************************
'ரயிலே நில்!
தண்டவாளத்தில்
குருவி'
************************************
'செருப்பை
உதறிவிட்டு
நடக்கிறேன்
தாய்மண் மீது'
************************************
'யாரங்கே?
என் கல்லறை மீது
நின்று கொண்டு
எனக்காகக்
கண்ணீர் வடிக்கும்
மெழுகுவர்த்தியை
அனைத்து விடுங்கள்!
அழுகை
எனக்குப் பிடிக்காத
ஒன்று'
******************************
****
-- முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன் தொகுப்பிலிருந்து

No comments: