Monday, January 4, 2010

யார் தீவிரவாதி?

பண்டாரநாயக ஆரம்பித்தது இந்த இன வெறி
ஐயோ வரப்போகிறது அரசு ஆணை
சிங்களம் மட்டுமே இனி அரசாங்க மொழி
தொலைந்தோம் நாம் துடித்தான் தமிழன்.
என்ன செய்யலாம்? யோசித்தான் தமிழன்
கடைகளை கொளுத்தலாமா?
சிங்களனை அடித்து உதைக்கலாமா? என்று பலவகையான எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன அனைத்து தமிழனுக்குள்ளும் .
சகோதரர்களே அதுவல்ல நமது பாதை என்றது ஒரு குரல், அனைத்து தமிழர்களும் திரும்பி பார்த்தார்கள் சொன்னவர் யார் என்று, அவர்தாம் தந்தை செல்வா .
சரி என்ன செய்யலாம்? என்றார்கள் அனைவரும்.
அரசுக்கு எதிராக அமைதிபோராட்டமே....
அமைதியான இந்த போராட்டமே நாம் iஎதிர்கால வாழ்வை நல்வழியில் அமைக்கும் என்றார் தந்தை செல்வா.
தந்தை செல்வாவின் அழைப்பை ஏற்று சூன் மாதம் இன்தாம் நாள் ஆயிரத்து தொள்ளயிரத்து ஐம்பத்தி ஆறாம் ஆண்டு நடை பெற்ற அமைதி ஊர்வலம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தமிழர் தலைகள், அரசுக்கு எதிரான கோசம் மட்டுமே இவர்கள் தாங்கிய ஆயுதம் அன்று .
கொழும்பு துறை முகத்தில் இருந்து பனி முடிந்து திரும்பிய சிங்களர்களின் கண்ணில் பட்டது கடலாய் திரண்டு வந்த தமிழர்களின் தலைகள்.
தமிழ் பேசதெரிந்த சிங்களன் ஒருவன் என்னவென்று எடுத்து சொன்னான் மற்றவர்களுக்கு என்ன கோசம் என்று . சிங்களன் கொதித்தான்,
என்ன திமிர் இவர்களுக்கு? சிங்கள நாட்டில் சிங்களம் ஆட்சி மொழியானால் இவர்களுக்கு என்ன ?
ஒண்ட வந்தவர்கள் சுரண்டியது போதாதா? இன்னும் என்ன வேண்டுமாம் இவர்களுக்கு,
நன்றாக படிகிறார்கள், அனைத்து துறைகளிலும் வேலை பெற்றார்கள், வீடு கட்டினார்கள், பணம் சம்பாதிக்கிறார்கள் இதற்கு மேலும் என்ன வேண்டுமாம்?
இவர்களை இப்படியே விடகூடாது ஒன்று சேருங்கள் ஊர்வலத்தினரை தாக்கலாம் என்று உடனடி ஆயுதம் கற்களை எடுத்து வீசி அமைதி ஊர்வலத்தினை கலைக்க எண்ணி ஆயிரமாயிரம் தமிழரின் குருதியை கொணர்ந்தார்கள் . அமைதி போராட்டம் நடத்திய தமிழர்கள் அன்று அடி மட்டும் வாங்கினார்கள் திரும்ப அடிக்கவே இல்லை காரணம் தந்தை செல்வாவின் பதை .
அடுத்த padhinaindhu நாட்களுக்குள் முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லபட்டார்கள்.
இத்தனை உயிர்பலி கொடுத்தும் தமிழர்களால் எத்தனை சிங்களர்கள் இறந்தார்கள்? அமைதி போராட்டத்தின் நடுவே தீவிரவாதத்தை தமிழன் செய்தானா?.
தமிழன் தன் உரிமையை காக்க தன் சொந்த நாட்டில் அமைதி ஊர்வலம்கூட செல்ல முடியாத நாடு இலங்கை.
இங்கே தீவிரவாதி யார்?

No comments: